செய்திகள்
கைது

எட்டயபுரம் அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட 9 பேர் கைது

Published On 2020-09-20 09:30 GMT   |   Update On 2020-09-20 09:30 GMT
எட்டயபுரம் அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட 9 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 லாரிகள், ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டது.
எட்டயபுரம்:

எட்டயபுரம் அருகே உள்ள வைப்பாற்று படுகையில் மணல் கடத்தல் நடப்பதாக எட்டயபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர்.

அப்போது வைப்பாற்று படுகையில் மணல் அள்ளிக் கொண்டிருந்த சிலர் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட முயன்றனர். அவர்களில் 9 பேரை போலீசார் மடக்கிப்பிடித்தனர்.

போலீசார் விசாரணையில், அவர்கள் விருதுநகர் மாவட்டம் திருச்சுழி பகுதியை சேர்ந்த முத்துராமலிங்கம் (வயது 31), கோவிந்தராஜ் (27), வேலன் (26), கணேசன் (27), முத்துராஜ் (23), காளிஸ்வரன் (31), மணிகண்டன் (30), பழனி (28), முத்து (24) என்பதும், மணல் கடத்தலில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து 9 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் மணல் அள்ள பயன்படுத்திய ஒரு பொக்லைன் எந்திரம், 2 லாரிகள், ஒரு கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில், மாரிமுத்து, மாடசாமி ஆகிய மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News