செய்திகள்
கொரோனா பரிசோதனை

மின்வாரிய ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை

Published On 2020-09-20 08:23 GMT   |   Update On 2020-09-20 08:23 GMT
கடத்தூர் மின்வாரியத்தில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் 65 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
கடத்தூர்:

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் கடத்தூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக கடத்தூர் பகுதியில் உள்ள அரசு அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடத்தூர் மின்வாரியத்தில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் 65 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. சுகாதார ஆய்வாளர் பார்த்திபன் தலைமையில் மருத்துவ குழுவினர் மின்வாரிய ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனையை மேற்கொண்டனர். இதில் செயற்பொறியாளர் ரவி மற்றும் சுகாதாரத்துறையை சேர்ந்த விஷ்ணு கார்த்திக், சோமு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News