செய்திகள்
அபராதம்

முககவசம் அணியாத 33 பேருக்கு அபராதம்

Published On 2020-09-20 08:16 GMT   |   Update On 2020-09-20 08:16 GMT
பெரம்பலூர் மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறையினரும், போலீசாரும் முககவசம் அணியாதவர்களுக்கும், சமூக இடைவெளியை பின்பற்றாதவர்களுக்கும் அபராதம் விதித்து வருகின்றனர்.
பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறையினரும், போலீசாரும் முககவசம் அணியாதவர்களுக்கும், சமூக இடைவெளியை பின்பற்றாதவர்களுக்கும் அபராதம் விதித்து வருகின்றனர். அதன்படி மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறையினர் முககவசம் அணியாத 32 பேருக்கு தலா ரூ.200 வீதம் அபராதம் விதித்து மொத்தம் ரூ.6 ஆயிரத்து 400 வசூலித்தனர். இதே போல் சமூக இடைவெளியை பின்பற்றாததற்கு ரூ.500 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. போலீசார் மூலம் முககவசம் அணியாத ஒருவரிடம் இருந்து ரூ.200 அபராதம் வசூலிக்கப்பட்டது.
Tags:    

Similar News