செய்திகள்
ராகுல் காந்தி

முதலாளிகளின் அடிமைகளாக விவசாயிகளை மாற்ற நினைக்கிறார் மோடி - ராகுல் காந்தி

Published On 2020-09-20 07:49 GMT   |   Update On 2020-09-20 07:49 GMT
முதலாளிகளின் அடிமைகளாக விவசாயிகளை மாற்ற மோடி அரசு நினைக்கிறது என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
புதுடெல்லி:

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் துறை தொடர்பான வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களும் நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டன.

இந்த வேளாண் மசோதாக்களுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் 2 வேளாண் மசோதாக்கள் இன்று மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தனது டுவிட்டரில் மத்திய அரசை கடுமையாக சாடி பதிவிட்டுள்ளார். அதில் ராகுல் காந்தி கூறியிருப்பதாவது:- மோடி அரசாங்கத்தால் விவசாயத்திற்கு எதிராக கொண்டு வரப்பட்ட சட்டத்தில் குறைந்த ஆதரவு விலைக்கு ஏன் உத்தரவாதம் அளிக்கவில்லை. முதலாளிகளின் அடிமைகளாக விவசாயிகளை மாற்ற மோடி நினைக்கிறார். மத்திய அரசின் இந்த திட்டம் வெற்றி பெற நாடு அனுமதிக்காது” என்று தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News