செய்திகள்
தங்க சங்கிலி பறிப்பு

சேலத்தில் மூதாட்டியிடம் 5 பவுன் தங்க சங்கிலி பறிப்பு

Published On 2020-09-19 14:36 GMT   |   Update On 2020-09-19 14:36 GMT
சேலத்தில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த மூதாட்டியிடம் 5 பவுன் தங்க சங்கிலியை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.
சேலம்:

சேலம் சீலநாயக்கன்பட்டி அருகே உள்ள காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் அனுசுயா (வயது 70). இவர் நேற்று காலை வீட்டின் அருகே உள்ள சாலையில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவரை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் 2 பேர் ஹெல்மெட் அணிந்தபடி வந்தனர். அப்போது திடீரென்று மோட்டார் சைக்கிளின் பின்புறம் உட்கார்ந்திருந்த மர்ம நபர் மூதாட்டி கழுத்தில் அணிந்து இருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டார். 

மூதாட்டி திருடன், திருடன் என சத்தம் போட்டார். இதையடுத்து அந்த வழியாக சென்றவர்கள் அவர்களை பிடிக்க முயன்றனர். ஆனால் 2 பேரும் கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர். இதுகுறித்து மூதாட்டி அன்னதானப்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மூதாட்டியிடம் 5 பவுன் நகையை பறித்துச் சென்ற 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News