செய்திகள்
கைது

கச்சிராயப்பாளையம் அருகே மின்வேலி அமைத்த விவசாயி கைது

Published On 2020-09-19 12:26 GMT   |   Update On 2020-09-19 12:26 GMT
கச்சிராயப்பாளையம் அருகே மின்வேலி அமைத்த விவசாயியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கச்சிராயப்பாளையம்:

கச்சிராயப்பாளையம் அருகே உள்ள மாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 40). விவசாயி. இவர் அதே பகுதியில் விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து பயிர் சாகுபடி செய்து வந்தார். ஆனால் பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தியதால் அவற்றை கட்டுப்படுத்தும் வகையில் மின்சாரத்தை திருடி வயலை சுற்றிலும் மின்வேலி அமைத்து இருந்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து உதவி மின்பொறியாளர் வெங்கடேசன் கச்சிராயப்பாளையம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் வள்ளி வழக்குப்பதிவுசெய்து விவசாயி ஆறுமுகத்தை கைது செய்தார்.
Tags:    

Similar News