செய்திகள்
தச்சநல்லூரில் கார் மோதி கட்டிட தொழிலாளி பலி
தச்சநல்லூரில் கார் மோதி கட்டிட தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
நெல்லை தச்சநல்லூர் கிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்தவர் வீரமணி (வயது 58). கட்டிட தொழிலாளியான இவர் தச்சநல்லூரில் மொபட்டில் வந்து கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கார் இவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை உடனே பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இதுகுறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.