செய்திகள்
திசையன்விளை அருகே முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
திசையன்விளை:
திசையன்விளை வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கண்ணன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் அருணாசலம், சுகாதார ஆய்வாளர்கள் பொன்னு முத்து, ஞானசேகர், பெலிக்ஸ், ரவிச்சந்திரன், தில்லை, சுஜின் மற்றும் திசையன்விளை போலீசார் திசையன்விளை பஜாரில் ரோந்து சென்றனர். அப்போது, முககவசம் அணியாமல் வந்த 60 பேரிடம் அபராதமாக ரூ.200 வீதம் ரூ.12 ஆயிரம் வசூலித்தனர்.