செய்திகள்
அபராதம்

கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாத நிறுவனங்களுக்கு அபராதம்

Published On 2020-09-19 09:34 GMT   |   Update On 2020-09-19 09:34 GMT
கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாத நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
ஆற்காடு:

ஆற்காட்டை அடுத்த சக்கரமல்லூர் மற்றும் கிராம்பாடி ஆகிய கிராமங்களில் உள்ள தனியார் நிறுவனங்களில் கொரோனா விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? என நேற்று காலை ஆற்காடு தாசில்தார் காமாட்சி ‘திடீர்’ ஆய்வு செய்தார். அப்போது சில நிறுவனங்களில் பணியாளர்களை சமூக இடைவெளி விட்டு பணியாற்ற நடவடிக்கை எடுக்காதது, கிருமி நாசினியை சரியான முறையில் பயன்படுத்தாதது உள்பட பல்வேறு விதிமீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதனால் அந்த நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
Tags:    

Similar News