செய்திகள்
தற்கொலை

புதுச்சத்திரம் அருகே பிளஸ்-1 மாணவி தற்கொலை- போலீசார் விசாரணை

Published On 2020-09-19 08:45 GMT   |   Update On 2020-09-19 08:45 GMT
புதுச்சத்திரம் அருகே பிளஸ்-1 மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல்:

செல்லியாயிபாளையத்தை சேர்ந்தவர் சிவக்குமார். கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர். முதல் மகளுக்கு திருமணமாகி விட்டது. 2-வது மகள் பவித்ரா (வயது 16). பிளஸ்-1 படித்து வந்தார். சிவகுமார் மற்றும் குடும்பத்தினர் தற்போது புதுச்சத்திரம் அருகே களங்கானி பகுதியில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். பவித்ரா நேற்று மாலை அங்குள்ள வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த புதுச்சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பவித்ராவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News