செய்திகள்
கைது

வீட்டில் பட்டாசு தயாரித்த முதியவர் கைது

Published On 2020-09-19 08:34 GMT   |   Update On 2020-09-19 08:34 GMT
தாயில்பட்டி அருகே வீட்டில் பட்டாசு தயாரித்த முதியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாயில்பட்டி:

தாயில்பட்டி ஊராட்சியை சேர்ந்த கோட்டையூரில் அனுமதி இல்லாமல் வீடுகளில் பட்டாசு தயாரிப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் வெம்பக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் வீடுகளில் சோதனை நடத்தினர். அப்போது தர்மராஜ் (வயது 60) என்பவர் வீட்டில் 3 பெட்டிகளில் சரவெடிகள், குருவி வெடிகள் தயாரித்து விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த வெடிகளை பறிமுதல் செய்து தர்மராஜை போலீசார் கைது செய்தார். பறிமுதல் செய்யப்பட்ட பட்டாசுகளின் மதிப்பு ரூ.15 ஆயிரம் ஆகும் என கூறப்படுகிறது.
Tags:    

Similar News