செய்திகள்
தற்கொலை

நாகர்கோவிலில் டிப்ளமோ என்ஜினீயர் தற்கொலை

Published On 2020-09-19 08:06 GMT   |   Update On 2020-09-19 08:06 GMT
வேலை கிடைக்காத விரக்தியில் டிப்ளமோ என்ஜினீயர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நாகர்கோவில்:

நாகர்கோவில் அனந்தன்நகர் இந்திரா தெருவை சேர்ந்தவர் ஜெகதீஷ் (வயது 26), டிப்ளமோ என்ஜினீயரான இவர் பல இடங்களில் வேலை தேடி அலைந்தார். ஆனால் படிப்பிற்கு தகுந்த வேலை அவருக்கு கிடைக்கவில்லை. இதனால் மனமுடைந்த ஜெகதீஷ் நேற்று வீட்டில் உள்ள ஒரு அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

தகவல் அறிந்த ஆசாரிபள்ளம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News