செய்திகள்
கைது

தூத்துக்குடி அருகே கஞ்சா விற்றவர் கைது

Published On 2020-09-18 12:36 GMT   |   Update On 2020-09-18 12:36 GMT
தூத்துக்குடி அருகே கஞ்சா விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி அருகே உள்ள முள்ளக்காடு ராஜீவ்நகர் 7-வது தெருவைச் சேர்ந்தவர் ரவி. இவருடைய மகன் வேல்முருகன் (வயது 27). இவர் ராஜீவ்நகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக, முத்தையாபுரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ் மற்றும் போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்றனர். போலீசார் வருவதை கண்டதும் வேல்முருகன் தப்பி ஓட முயன்றார். அவரை போலீசார் மடக்கிப்பிடித்து, கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News