செய்திகள்
திருப்பத்தூரில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்- 24 பேர் கைது
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் 24 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பத்தூர்:
திருப்பத்தூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது ‘நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரியும், ‘நீட்’ தேர்வுக்கு எதிராகவும் கோஷம் எழுப்பப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வெங்கட்ராமன், பழனிச்சாமி, லட்சுமணன், கோவேந்தவன், மாறப்பாண்டியன் உள்பட 24 பேரை போலீசார் கைது செய்தனர்.