செய்திகள்
கோப்பு படம்.

சென்னையில் 983 பேருக்கு புதிதாக கொரோனா - மாவட்ட வாரியாக பாதிப்பு நிலவரம்

Published On 2020-09-16 14:56 GMT   |   Update On 2020-09-16 14:56 GMT
தமிழகத்தில் இன்று 5 ஆயிரத்து 652 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக பாதிப்பு நிலவரத்தை காண்போம்.
சென்னை:

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது.

அதன்படி, தமிழகத்தில் இன்று 5 ஆயிரத்து 652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 19 ஆயிரத்து 860 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பரவியவர்களில் இன்று ஒரே நாளில் 5 ஆயிரத்து 768 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 64 ஆயிரத்து 668 ஆக உயர்ந்துள்ளது.


மாவட்ட வாரியாக இன்று புதிதாக கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை:-


அரியலூர் - 27
செங்கல்பட்டு - 319
சென்னை - 983
கோவை - 549
கடலூர் - 263
தர்மபுரி - 117
திண்டுக்கல் - 68
ஈரோடு - 98
கள்ளக்குறிச்சி - 162
காஞ்சிபுரம் - 189
கன்னியாகுமரி - 114
கரூர் - 43
கிருஷ்ணகிரி - 68
மதுரை - 97
நாகை - 71
நாமக்கல் - 120
நீலகிரி - 72
பெரம்பலூர் - 16
புதுக்கோட்டை - 131
ராமநாதபுரம் - 36
ராணிப்பேட்டை - 96
சேலம் - 280
சிவகங்கை - 42
தென்காசி - 70
தஞ்சாவூர் - 138
தேனி - 50
திருப்பத்தூர் - 93
திருவள்ளூர் - 282
திருவண்ணாமலை - 156
திருவாரூர் - 139
தூத்துக்குடி - 85
திருநெல்வேலி - 118
திருப்பூர் - 149
திருச்சி - 98
வேலூர் - 116
விழுப்புரம் - 142
விருதுநகர் - 50
விமான நிலைய கண்காணிப்பு
வெளிநாடு - 0
உள்நாடு - 5
ரெயில் நிலைய கண்காணிப்பு - 0

மொத்தம் - 5,652
Tags:    

Similar News