செய்திகள்
பாஜக மாநில தலைவர் எல் முருகன்

‘நீட்’ தேர்வு விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம்- எல்.முருகன்

Published On 2020-09-16 02:48 GMT   |   Update On 2020-09-16 02:48 GMT
‘நீட்’ தேர்வு விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம் என்று பா.ஜ.க. மாநில தலைவர் எல்.முருகன் கூறி உள்ளார்.
சென்னை:

பா.ஜ.க. மாநில தலைவர் எல்.முருகன் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

பிரதமர் மோடியின் பிறந்தநாள் வருகிற 17-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி மாநிலம் முழுவதும் மரக்கன்று நடுதல், அன்னதானம் வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகளுடன் சிறப்பாக கொண்டாட முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.

‘நீட்’ தேர்வு விவகாரத்தில் மாணவர்களின் உயிருடனும், உணர்வுகளுடனும் விளையாடக்கூடாது. அரசியல் லாபத்துக்காக மாணவர்களை தூண்டிவிடுவதை மு.க.ஸ்டாலின் நிறுத்திக்கொள்ள வேண்டும். காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி அரசு, 2ஜி ஊழல் செய்வதையே சிந்தனையாக கொண்டிருந்ததால் அப்போது ‘நீட்’ தேர்வுக்கு வாய் திறக்கவில்லை. ‘நீட்’ தேர்வு விவகாரத்தில் மு.க.ஸ்டாலின், நடிகர் சூர்யா உள்ளிட்ட யாரும் அரசியல் செய்யவேண்டாம்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News