செய்திகள்
தற்கொலை

ஊரடங்கால் வேலை இழந்த பெயிண்டர் தற்கொலை

Published On 2020-09-15 09:41 GMT   |   Update On 2020-09-15 09:41 GMT
ஊரடங்கால் வேலை இழந்ததால் பெயிண்டர் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
ஈத்தாமொழி:

ஈத்தாமொழி அடுத்த புதூர் ஊத்தங்கரையை சேர்ந்தவர் செல்வன்(வயது 59), பெயிண்டர். இவருக்கு செல்வராணி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். மேலும், செல்வனுக்கு மதுகுடிக்கும் பழக்கமும் இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த 5 மாதங்களாக கொரோனா ஊரடங்கு காரணமாக செல்வனுக்கு வேலை இல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். வருமானம் இல்லாதால் குடும்பம் நடத்த முடியாமல் தவித்து வந்த செல்வன் கடந்த சில நாட்களாக மனமுடைந்த நிலையில் காணப்பட்டு வந்தார்.

நேற்றுமுன்தினம் வீட்டில் யாரும் இல்லாததால் செல்வன் மட்டும் தனியாக இருந்தார். சிறிது நேரத்தில் வெளியே சென்ற இளைய மகள் வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் கதவு மூடப்பட்டு இருந்தது. ஜன்னல் வழியாக பார்த்த போது செல்வன் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியில் அலறினார். சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தனர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் செல்வன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து செல்வனின் மனைவி செல்வராணி கொடுத்த புகாரின் பேரில் ஈத்தாமொழி சப்-இன்ஸ்பெக்டர் மணி வழக்குப்பதிவு செய்து, இன்ஸ்பெக்டர் மீனா விசாரணை நடத்தி வருகிறார்கள். ஊரடங்கால் வேலை இழந்ததால் பெயிண்டர் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News