செய்திகள்
ராணிப்பேட்டையில் இந்திய குடியரசு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
இந்திய குடியரசு கட்சி சார்பில், ராணிப்பேட்டை முத்துக்கடையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
சிப்காட் (ராணிப்பேட்டை):
இந்திய குடியரசு கட்சி சார்பில், ராணிப்பேட்டை முத்துக்கடையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வேலூர் கிழக்கு மாவட்ட தலைவர் வக்கீல் சிவக்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் தமிழ்குசேலன் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக மாநில பொது செயலாளர் அனந்தலை தங்கராஜ் கலந்து கொண்டார்.
ஆர்ப்பாட்டத்தின் போது, கொரோனா காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் அனைவருக்கும் நிவாரண தொகையாக ரூ.5 ஆயிரம் முதல் கட்டமாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. இதில் மாநில அமைப்பு செயலாளர் தன்ராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் சம்பத்குமார், ராணிப்பேட்டை நகர தலைவர் இளங்கோவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.