செய்திகள்
எம்சி சம்பத்

சென்னையில் மெட்ரோ ரெயில் காலை 7 மணிக்கே புறப்படும்- அமைச்சர் எம்.சி.சம்பத்

Published On 2020-09-05 07:20 GMT   |   Update On 2020-09-05 07:20 GMT
சென்னையில் மெட்ரோ ரெயில் காலை 8 மணிக்கு பதில் 7 மணிக்கே புறப்படும் என்று அமைச்சர் எம்.சி.சம்பத் கூறினார்.
சென்னை:

சென்னையில் வருகிற 7-ந்தேதி முதல் 5 நிமிடத்திற்கு ஒரு மெட்ரோ ரெயில் இயக்கப்படுகிறது. காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மெட்ரோ ரெயில் சேவை காலை 8 மணிக்கு பதில் 7 மணிக்கே தொடங்கும் என்று அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார்.

க்யூ.ஆர். வழிமுறையில் மெட்ரோ ரெயில் டிக்கெட்டுகள் வழங்கப்படும். மெட்ரோ ரெயில் சேவைக்கான நடைமுறைகள் எளிதாக்கப்பட்டுள்ளது. அதே சமயம், பழைய கட்டணமே வசூலிக்கப்படும். மெட்ரோ ரெயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு 100% பாதுகாப்பு வழங்கப்படும்.

தொழில்துறையினரின் கோரிக்கை ஏற்று மெட்ரோ ரெயில் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை இயக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News