செய்திகள்
வரைவு வாக்காளர் பட்டியல் - அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை
சட்டசபை தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் குறித்து, அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு இன்று ஆலோசனை நடத்தினார்.
சென்னை:
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இறுதி வாக்காளர் பட்டியல் வரும் ஜனவரி 15-ல் வெளியிடப்படும் என தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்தாண்டு நவ.16ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
நவ 16முதல் டிச. 15 வரை பெயர் சேர்ப்பு, நீக்குதல் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்ளலாம் என கூறியுள்ளது.
இந்நிலையில், வரைவு வாக்காளர் பட்டியல் தொடர்பாக அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு இன்று ஆலோசனை நடத்தினார்.