செய்திகள்
கனிமொழி

பாராளுமன்றத்தில் கேள்வி நேரம் ரத்து அறிவிப்பு- கனிமொழி கருத்து

Published On 2020-09-02 10:07 GMT   |   Update On 2020-09-02 10:07 GMT
பாராளுமன்றத்தில் கேள்வி நேரம் ரத்து அறிவிப்பு குறித்து திமுக எம்.பி. கனிமொழி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை:

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 14ஆம் தேதி தொடங்கும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. வரும் அக்டோபர் ஒன்றாம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத் தொடரில் கேள்வி நேரம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜீரோ ஹவர் அரைமணி நேரம் மட்டும் நடைபெறும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. கேள்வி நேரம் மற்றும் ஜீரோ ஹவர் தொடர்பான அறிவிப்பு ஜனநாயகத்தின் குரலை நெரிக்கும் செயல் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

இந்நிலையில் பாராளுமன்றத்தில் கேள்வி நேரம் ரத்து அறிவிப்பு குறித்து திமுக எம்.பி. கனிமொழி ட்விட்டரில் கூறியிருப்பதாவது:

பாஜக அரசின் முடிவு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரிதிநிதிகள் கூட அரசை கேள்வி கேட்க உரிமையில்லை என்பதை காட்டுகிறது.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.



Tags:    

Similar News