செய்திகள்
கனிமொழி எம்.பி.

மக்களின் நிலையை எப்போது புரிந்து கொள்வார்கள் இந்த ஆட்சியாளர்கள்? -தி.மு.க. எம்.பி. கனிமொழி கேள்வி

Published On 2020-08-31 09:50 GMT   |   Update On 2020-08-31 09:50 GMT
பெருந்தொற்று காலத்தில் நாட்டில் வேலைவாய்ப்பு இழப்பு, பொருளாதார சிக்கல் என்று பல இன்னல்களை மக்கள் சந்தித்து வருவதாக கனிமொழி எம்.பி. கூறியுள்ளார்.
சென்னை:

தமிழகத்தில் சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், திமுக எம்பி கனிமொழி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

பெருந்தொற்று காலம்... வேலைவாய்ப்பு இழப்பு, பொருளாதார சிக்கல் என்று பல இன்னல்கள். இச்சூழலில் கூட சுங்கக் கட்டணத்தை வசூலிக்காமல் இருக்க மனமில்லாதவர்கள் விலை ஏற்றத்தையாவது மனிதாபிமானத்தோடு தவிர்க்கலாம். என்றுதான் மக்களுடைய சூழ்நிலையை புரிந்து கொள்வார்களோ ஆட்சியாளர்கள்?

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Tags:    

Similar News