செய்திகள்
மக்களின் நிலையை எப்போது புரிந்து கொள்வார்கள் இந்த ஆட்சியாளர்கள்? -தி.மு.க. எம்.பி. கனிமொழி கேள்வி
பெருந்தொற்று காலத்தில் நாட்டில் வேலைவாய்ப்பு இழப்பு, பொருளாதார சிக்கல் என்று பல இன்னல்களை மக்கள் சந்தித்து வருவதாக கனிமொழி எம்.பி. கூறியுள்ளார்.
சென்னை:
தமிழகத்தில் சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், திமுக எம்பி கனிமொழி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
பெருந்தொற்று காலம்... வேலைவாய்ப்பு இழப்பு, பொருளாதார சிக்கல் என்று பல இன்னல்கள். இச்சூழலில் கூட சுங்கக் கட்டணத்தை வசூலிக்காமல் இருக்க மனமில்லாதவர்கள் விலை ஏற்றத்தையாவது மனிதாபிமானத்தோடு தவிர்க்கலாம். என்றுதான் மக்களுடைய சூழ்நிலையை புரிந்து கொள்வார்களோ ஆட்சியாளர்கள்?
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.