செய்திகள்
கேஎஸ் அழகிரி

காங்கிரஸ் என்றால் வசந்தகுமார்- கேஎஸ் அழகிரி

Published On 2020-08-28 14:12 GMT   |   Update On 2020-08-28 14:12 GMT
வசந்தகுமார் என்றால் காங்கிரஸ், காங்கிரஸ் என்றால் வசந்தகுமார் என தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி கூறியுள்ளார்.
சென்னை:

கன்னியாகுமரி தொகுதி எம்.பி. வசந்தகுமாருக்கு கடந்த 10-ந்தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த சில நாட்களுக்கு முன் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இன்று அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை தெரிவித்தது. இந்நிலையில் இன்று இரவு 7 மணி அளவில் அவர் சிகிச்சை பலனின்றி காலமானார்.

வசந்தகுமாரின் மறைவுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, 

வசந்தகுமார் என்றால் காங்கிரஸ், காங்கிரஸ் என்றால் வசந்தகுமார் என கேஎஸ் அழகிரி புகழாரம் சூட்டினார். வசந்தகுமாரின் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. 

கொரோனா காலத்திலும் தனது தொகுதிக்கு வாரி, வாரி வழங்கினார். உள்ளத்தால், அரசியலால் தொழிலால் புகழால் உயர்ந்திருக்கிறார். எச்  வசந்தகுமாரின் மறைவு தமிழக காங்கிரசுக்கு பேரிழப்பு என கூறியுள்ளார்.
Tags:    

Similar News