செய்திகள்
துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்

கோயம்பேடு மொத்த காய்கறி அங்காடி செப். 28 ம் தேதி திறக்கப்படும்: துணை முதல்வர்

Published On 2020-08-27 15:42 GMT   |   Update On 2020-08-27 15:42 GMT
கோயம்பேடு மொத்த காய்கறி அங்காடி செப்டம்பர் 28-ம் தேதி திறக்கப்படும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.
சென்னை:

சென்னை கோயம்பேடு சந்தைக்கு வந்து சென்ற பலருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து சந்தை மூடப்பட்டு, காய்கறி சந்தை திருமழிசையில் செயல்பட்டு வருகிறது.

தற்போது சென்னையில் ஓரளவு கொரோனா கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், கோயம்பேடு சந்தையை மீண்டும் திறக்க வணிகர்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இதைத் தொடர்ந்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று காலை கோயம்பேடு காய்கறி சந்தையை நேரில் ஆய்வு செய்தார். 

இந்நிலையில், கோயம்பேடு மொத்த காய்கறி அங்காடி செப்டம்பர் 28-ம் தேதி  திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 18-ம் தேதி முதல் கோயம்பேடு சந்தை தானிய அங்காடி  திறக்கப்படும் என துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.
Tags:    

Similar News