செய்திகள்
எடப்பாடி பழனிசாமி

மத்திய அரசை பின்பற்றியே தமிழகத்தில் மத ஊர்வலங்களுக்கு தடை- முதலமைச்சர்

Published On 2020-08-20 08:32 GMT   |   Update On 2020-08-20 08:32 GMT
மத்திய அரசை பின்பற்றியே மத ஊர்வலங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
வேலூர்:

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முதல்வர் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருக்கிறது.

* கொரோனா பாதிப்பை கண்டறிவதற்கு வேலூரில் 2,609 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.

* ராணிப்பேட்டை மாவட்டத்தில் 3,350 காய்ச்சல் முகாம்கள் நடைபெற்றுள்ளன.

* திருப்பத்தூர் மாவட்டத்தில் சுய உதவிக்குழுக்களுக்கு 3 ஆண்டுகளில் ரூ.583.45 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

* சிறப்பு குறைதீர் திட்டம் மூலம் தீர்வு காணப்பட்ட மனுக்களின் எண்ணிக்கை: வேலூர் - 11,667, ராணிப்பேட்டை - 7,524, திருப்பத்தூர் - 4,650

* இருசக்கர வாகன திட்டத்தில் பயனடைந்தோர் எண்ணிக்கை: வேலூர்-3,882, ராணிப்பேட்டை-3,878, திருப்பத்தூர்-3,540

* கொரோனாவை தடுக்க குடும்ப அட்டையில் பெயர் உள்ள அனைவருக்கும் விலையில்லா முகக்கவசம் வழங்கப்பட்டுள்ளது.

* தென்பெண்ணையாறு-பாலாறு இணைப்புத்திட்டத்திற்கு பணிகள் நடைபெற்று வருகின்றன.

* வேலூர் மாவட்டத்தில் பிற பகுதிகளை சேர்ந்த பெண் தொழிலாளர்களுக்கு விடுதி கட்ட பரிசீலனை

* கொரோனாவால் அரசுக்கு வருவாய் இழப்பு இருந்தாலும் மக்களுக்கான திட்டங்கள் குறைவின்றி நிறைவேற்றப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு தடை விதிக்கப்பட்டது குறித்த கேள்விக்கு முதலமைச்சர் கூறியதாவது:

கொரோனா அச்சுறுத்தலால் மத ஊர்வலங்களை மத்திய அரசு அனுமதிக்கவில்லை; அதனை தமிழக அரசு பின்பற்றுகிறது. நீதிமன்ற உத்தரவு, மத்திய அரசு வழிகாட்டுதல்படி விநாயகர் சதுர்த்தி கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

Tags:    

Similar News