செய்திகள்
அமித்ஷா விரைவில் குணமடைய எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா விரைவில் குணமடைய வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
சென்னை:
கொரோனா தொற்றில் இருந்து மீண்ட மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, உடல்வலி மற்றும் சோர்வுக்கு சிகிச்சை பெறுவதற்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். அவர் விரைவில் குணமடைய பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
அந்தவகையில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், அமித்ஷாவுக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் தளத்தில் கூறுகையில், ‘மதிப்புக்குரிய உள்துறை மந்திரி அமித்ஷாஜி விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன். அதன்மூலம் அவர் தன்னுடைய வழக்கமான பணிகளை தொடரவும், நாட்டு மக்களுக்கு சேவையாற்றவும் முடியும்’ என்று குறிப்பிட்டு உள்ளார்.
கொரோனா தொற்றில் இருந்து மீண்ட மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, உடல்வலி மற்றும் சோர்வுக்கு சிகிச்சை பெறுவதற்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். அவர் விரைவில் குணமடைய பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
அந்தவகையில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், அமித்ஷாவுக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் தளத்தில் கூறுகையில், ‘மதிப்புக்குரிய உள்துறை மந்திரி அமித்ஷாஜி விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன். அதன்மூலம் அவர் தன்னுடைய வழக்கமான பணிகளை தொடரவும், நாட்டு மக்களுக்கு சேவையாற்றவும் முடியும்’ என்று குறிப்பிட்டு உள்ளார்.