செய்திகள்
இ-பாஸ்

சென்னையில் ஒரே நாளில் 14,300 இ-பாஸ் வினியோகம்

Published On 2020-08-19 01:10 GMT   |   Update On 2020-08-19 01:10 GMT
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், மாநிலங்களில் இருந்தும் சென்னை வருவதற்கு நேற்று 14,300 இ-பாஸ் வழங்கப்பட்டுள்ளது.
சென்னை:

இ-பாஸ் நடைமுறை தளர்வு அமலுக்கு வந்ததை அடுத்து அத்தியாவசிய காரணங்களுக்காக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல ஆன்லைனில் விண்ணப்பித்தோருக்கு உடனுக்குடன் இ-பாஸ் வழங்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

வெளி மாவட்டங்களில் இருந்து நேற்று ஏராளமானோர் வாகனங்களில் சென்னையை நோக்கி படையெடுத்தனர். இ-பாஸ் எளிதாக கிடைத்ததாலும், போலீஸ் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளின் கெடுபிடி இல்லாததாலும் மக்கள் மகிழ்ச்சியுடன் பயணம் மேற்கொண்டனர்.

இந்நிலையில் தமிழகத்தில் விண்ணப்பித்த அனைவருக்கும் இ-பாஸ் என்ற நடைமுறை அமலுக்கு வந்த நிலையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், மாநிலங்களில் இருந்தும் சென்னை வருவதற்கு நேற்று 14,300 இ-பாஸ் வழங்கப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News