செய்திகள்
டாஸ்மாக்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2020-08-18 13:02 GMT   |   Update On 2020-08-18 13:02 GMT
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பொள்ளாச்சி:

கொரோனா தொற்று காரணமாக இறந்த ஊழியர்களுக்கு ரூ.50 லட்சம் வழங்க வேண்டும், காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்தி வாரிசு வேலை வழங்க வேண்டும், தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், கேரள மதுக்கடை நிர்வாக முறையை டாஸ்மாக்கில் அமல்படுத்த வேண்டும் என்பன உள்பட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பொள்ளாச்சியில் டாஸ்மாக் அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பொள்ளாச்சி கோட்டூர் ரோட்டில் உள்ள மதுக்கடை முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு தமிழ்நாடு விற்பனையாளர் சங்க மாவட்ட தலைவர் வீராசாமி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் நிர்வாகிகள் திருமுருகன், ஆறுமுகம், நாகராஜ், முத்துவீரன் கருப்புசாமி, செந்தில்குமார் மற்றும் ஊழியர்கள் பலர் கலந்துகொண்டனர்.
Tags:    

Similar News