செய்திகள்
ஆர்ப்பாட்டம்

டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2020-08-18 11:44 GMT   |   Update On 2020-08-18 11:51 GMT
பரமக்குடியில் டாஸ்மாக் ஊழியர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கடைகளின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பரமக்குடி:

பரமக்குடியில் டாஸ்மாக் ஊழியர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கடைகளின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில துணைச்செயலாளர் வேலாயுதம் தலைமை தாங்கினார். தொ.மு.ச. மாவட்ட துணைச்செயலாளர் கலைஞர், மேற்பார்வையாளர் முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தின்போது டாஸ்மாக் பணியாளர்களை தமிழக அரசு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் சங்க நிர்வாகிகள் கலைவாணன், இளங்கோவன் ஆகியோர் பலர் பேசினர். இதில் விற்பனையாளர்கள், மேற்பார்வையாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Tags:    

Similar News