செய்திகள்
பள்ளிகளை திறப்பது எப்போது?- அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை
பள்ளிகளை திறப்பது குறித்து உயர் அதிகாரிகளுடன் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
சென்னை:
கொரோனா பாதிப்பு தன்மையை பொறுத்து மாநில அரசாங்கம் பள்ளிகள் திறப்பது குறித்து முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது.
இந்நிலையில், தமிழகத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், பள்ளிக்கல்வித்துறை செயலாளர், ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ள நிலையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.