செய்திகள்
சென்னையில் அவசரமாக டாஸ்மாக் திறப்பது ஏன்? கனிமொழி டுவிட்
சென்னையில் அவசரமாக டாஸ்மாக் கடைகளை திறப்பது ஏன்? என திமுக எம்பி கனிமொழி டுவிட் செய்துள்ளார்.
சென்னை:
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக டாஸ்மாக் கடைகள் தமிழகம் முழுவதும் திறக்கப்படாமல் இருந்தது. அதன்பின் கட்டுப்பபாட்டு பகுதிகள் மற்றும் சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள் தவிர மற்ற இடங்களில் ஏற்கனவே கடந்த மே மாதம் முதல் வாரத்தில் இருந்து டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டது.
நாளையில் இருந்து சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் டாஸ்மாக் திறப்பது குறித்து கனிமொழி எம்பி டுவிட் செய்துள்ளார். அதில், சென்னையில் அவசரமாக டாஸ்மாக் கடைகளை திறப்பது ஏன்? பிறமாவட்ட கொரோனா பாதிப்புடன் சென்னையை போட்டி போட வைக்க டாஸ்மாக் திறக்கப்படுகிறதா? என கேள்வி எழுப்பியுள்ளார்.