செய்திகள்
கிராம பகுதிகளில் கொரோனா பரிசோதனை முகாம்
பட்டுக்கோட்டை அருகே உள்ள அணைக்காடு, பொன்னவராயன்கோட்டை ஆகிய கிராம பகுதிகளில் நேற்று கொரோனா பரிசோதனை முகாம் நடந்தது.
பட்டுக்கோட்டை:
பட்டுக்கோட்டை மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் பட்டுக்கோட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட 43 கிராம ஊராட்சிகளிலும் கொரோனா பரிசோதனை முகாம் நடத்தப்பட்டு வருகிறது. பட்டுக்கோட்டை அருகே உள்ள அணைக்காடு, பொன்னவராயன்கோட்டை ஆகிய கிராம பகுதிகளில் நேற்று கொரோனா பரிசோதனை முகாம் நடந்தது. முகாமில் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் பொய்யாமொழி, ரவிச்சந்திரன், ஊராட்சி தலைவர்கள் ரெத்தினம், கீதாஞ்சலி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.