செய்திகள்
ஊரடங்கை மீறியதாக 66 பேர் மீது வழக்கு
ஊரடங்கை மீறியதாக 66 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கரூர்:
கொரோனா பரவலை தடுக்கும்பொருட்டு வருகிற 31-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம் ஆகியவற்றிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் ஊரடங்கு உத்தரவை மீறி நேற்று முன்தினம் கரூர் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 16 பேர் மீதும், கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்த 50 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.