செய்திகள்
பீர்பாட்டிலால் தாக்கி டாஸ்மாக் ஊழியர்களிடம் ரூ.3¼ லட்சம் வழிப்பறி
டாஸ்மாக் ஊழியர்களை தாக்கி பணம் பறித்துச் சென்ற சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
புதூர்:
மதுரை சிலைமான் அருகே பனையூர் செல்லும் வழியில் டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு விற்பனையாளராக ராஜேந்திர குமார் (வயது 45) என்பவர் பணியாற்றி வருகிறார். இவரும், சக ஊழியர் ஒருவரும் வழக்கம் போல் கடையை மூடிவிட்டு வசூல் பணம் ரூ.3 லட்சத்து 35 ஆயிரத்து 600-ஐ ஒரு பையில் எடுத்து கொண்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது முக கவசம் அணிந்துகொண்டு இருசக்கர வாகனத்தில் வந்த 3 வாலிபர்கள் அவர்கள் இருவரையும் வழிமறித்து பீர் பாட்டிலை தூக்கி வீசினர். பின்னர் உடைந்த பாட்டிலால் அவர்களில் கையில் கீறினர்.
இதில் அவர்கள் இருவரும் நிலைகுலையவே அவர்களிடம் இருந்த பணப்பையை பறித்துக் கொண்டு தப்பி ஓடி விட்டனர். இதில் படுகாயம் அடைந்த டாஸ்மாக் ஊழியர்கள் இருவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து தகவல் அறிந்த சிலைமான் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாடசாமி வழக்குப்பதிவு செய்து போலீசாரை உஷார்படுத்தினார். ஆங்காங்கே ரோந்து பணியில் இருக்கும் போலீசார் வாக்கி டாக்கி மூலம் தகவல்களை பரிமாறிக் கொண்டனர். வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டது. இதில் 2 பேர் போலீசாரிடம் சிக்கினர். அவர்கள் வந்த இருசக்கர வாகனம் திருட்டு வாகனம் என்பது தெரிய வந்தது. டாஸ்மாக் ஊழியர்களை தாக்கி பணம் பறித்துச் சென்றது அவர்கள்தானா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரை சிலைமான் அருகே பனையூர் செல்லும் வழியில் டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு விற்பனையாளராக ராஜேந்திர குமார் (வயது 45) என்பவர் பணியாற்றி வருகிறார். இவரும், சக ஊழியர் ஒருவரும் வழக்கம் போல் கடையை மூடிவிட்டு வசூல் பணம் ரூ.3 லட்சத்து 35 ஆயிரத்து 600-ஐ ஒரு பையில் எடுத்து கொண்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது முக கவசம் அணிந்துகொண்டு இருசக்கர வாகனத்தில் வந்த 3 வாலிபர்கள் அவர்கள் இருவரையும் வழிமறித்து பீர் பாட்டிலை தூக்கி வீசினர். பின்னர் உடைந்த பாட்டிலால் அவர்களில் கையில் கீறினர்.
இதில் அவர்கள் இருவரும் நிலைகுலையவே அவர்களிடம் இருந்த பணப்பையை பறித்துக் கொண்டு தப்பி ஓடி விட்டனர். இதில் படுகாயம் அடைந்த டாஸ்மாக் ஊழியர்கள் இருவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து தகவல் அறிந்த சிலைமான் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாடசாமி வழக்குப்பதிவு செய்து போலீசாரை உஷார்படுத்தினார். ஆங்காங்கே ரோந்து பணியில் இருக்கும் போலீசார் வாக்கி டாக்கி மூலம் தகவல்களை பரிமாறிக் கொண்டனர். வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டது. இதில் 2 பேர் போலீசாரிடம் சிக்கினர். அவர்கள் வந்த இருசக்கர வாகனம் திருட்டு வாகனம் என்பது தெரிய வந்தது. டாஸ்மாக் ஊழியர்களை தாக்கி பணம் பறித்துச் சென்றது அவர்கள்தானா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.