செய்திகள்
தற்கொலை

ராணிப்பேட்டை அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை

Published On 2020-08-15 09:32 GMT   |   Update On 2020-08-15 09:32 GMT
ராணிப்பேட்டை அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிப்காட்(ராணிப்பேட்டை):

ராணிப்பேட்டை அருகே அம்மூர், சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 40), ஆட்டோ டிரைவர். இவரது மனைவி மோகனபிரியா (37).

கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப தகராறு இருந்து வந்தது. இதனால் மனமுடைந்த மோகனபிரியா நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து ராணிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News