செய்திகள்
வானிலை ஆய்வு மையம்

நீலகிரியில் கனமழை பெய்ய வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்

Published On 2020-08-15 07:23 GMT   |   Update On 2020-08-15 07:23 GMT
காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:

சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியதாவது:

காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை, வேலூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

அதிகபட்சமாக தேவாலாவில் 7 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Tags:    

Similar News