செய்திகள்
ஓ பன்னீர்செல்வம்

ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில் மூத்த அமைச்சர்கள் ஆலோசனை

Published On 2020-08-15 06:44 GMT   |   Update On 2020-08-15 06:44 GMT
துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில் மூத்த அமைச்சர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
சென்னை:

சென்னையில் உள்ள இல்லத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றார்.

அதிமுகவில் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற விவாதம் எழுந்த நிலையில் மூத்த அமைச்சர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

தேனி மாவட்டம் பெரிய குளம் பகுதியில் ‘ஓ.பி.எஸ்.தான் அடுத்த முதல்வர்’ என போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ள நிலையில் ஆலோசனை நடைபெறுவதாக தெரிய வந்துள்ளது.

துணை முதல்வருடனான ஆலோசனைக்குப்பின் அமைச்சர்கள் முதலமைச்சருடன் ஆலோசிப்பார்கள் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செங்கோட்டையன், கடம்பூர் ராஜூ உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
Tags:    

Similar News