செய்திகள்
மீனவ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்திய காட்சி.

தேசிய மீன்வள கொள்கையை கண்டித்து மீனவ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2020-08-14 15:55 GMT   |   Update On 2020-08-14 15:55 GMT
முத்துப்பேட்டை பேரூராட்சி அலுவலக அருகே ஏ.ஐ.டி.யூ.சி. மீனவ தொழிலாளர்கள் சங்கம் சார்பில் தேசிய மீன்வள கொள்கையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
முத்துப்பேட்டை:

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பேரூராட்சி அலுவலக அருகே ஏ.ஐ.டி.யூ.சி. மீனவ தொழிலாளர்கள் சங்கம் சார்பில் தேசிய மீன்வள கொள்கையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. 

ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டக்குழு உறுப்பினர் பசூல் ரகுமான், நிர்வாகி சங்கர் ஆகியோர் தலைமை தாங்கினர். 

இந்திய கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் முருகையன், நகர செயலாளர் மார்க்ஸ் மற்றும் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
Tags:    

Similar News