செய்திகள்
விபத்து

திருப்பூர் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி

Published On 2020-08-14 15:46 GMT   |   Update On 2020-08-14 15:46 GMT
திருப்பூர் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்து வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார், இது குறித்து அனுப்பர்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அனுப்பர்பாளையம்:

திருப்பூர் அனுப்பர்பாளையம் புதூரை அடுத்த வாரச்சந்தை பகுதியை சேர்ந்த சந்திரன் என்பவரின் மகன் பிரபாகரன் (வயது 27). இவர் நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து திருப்பூர் அவினாசி ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். காந்திநகர் ஆஷர்நகர் அருகே சென்றபோது பிரபாகரன் நிலைதடுமாறி மோட்டார்சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார். 

இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு, திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு பிரபாகரனை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். 

இதுகுறித்து அனுப்பர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News