செய்திகள்
மரணம்

பிரசவத்தின்போது தாயும், சேயும் இறந்த பரிதாபம்- போலீசார் விசாரணை

Published On 2020-08-14 13:50 GMT   |   Update On 2020-08-14 13:50 GMT
திருப்பனந்தாள் அருகே பிரசவத்தின் போது தாயும், சேயும் பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பனந்தாள்:

தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் அருகே தத்துவாஞ்சேரி வடபாதி கீழத்தெருவை சேர்ந்தவர் அழகுநாதன். பெயிண்டர். இவரது மனைவி தவமணி(வயது 30). இவர்களுக்கு திருமணம் ஆகி 2 ஆண்டுகள் ஆகிறது. தவமணி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.

நேற்று முன்தினம் தவமணிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக அவரை அருகில் இருந்தவர்கள் பிரசவத்திற்காக கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தவமணிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. ஆனால் குழந்தை பிறந்த சிறிது நேரத்திலேயே இறந்து விட்டது.

பிரசவத்தை தொடர்ந்து தவமணியின் உடல் நிலை மிகவும் மோசமானது. இதனால் அவரை உடனடியாக மேல்சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி தவமணி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து திருப்பனந்தாள் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிரசவத்தின் போது தாயும், சேயும் பரிதாபமாக இறந்த சம்பவம் அந்தபகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News