செய்திகள்
கொரோனா அதிகம் பாதித்த பகுதிகளில் மருத்துவ முகாம்
ஆரணி நகராட்சியில் கொரோனா அதிகம் பாதித்த பகுதிகளில் மருத்துவ முகாம் நடைபெற்றது.
ஆரணி:
ஆரணி நகராட்சியில் கொரோனா தொற்று அதிகம் பாதித்த பகுதிகளான பள்ளிக்கூட தெரு, பெரியார் நகர், வி.ஏ.கே.நகர் ஆகிய பகுதிகளில் நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) டி.ராஜவிஜயகாமராஜ் தலைமையில் மருத்துவக் குழுவினர் மூலம் மருத்துவ முகாம் நடந்தது. அதைத்தொடர்ந்து அப்பகுதிகளில் நகராட்சி சித்த மருத்துவப் பிரிவு சார்பில் கபசுர குடிநீரும் வழங்கப்பட்டது. அப்போது டாக்டர்கள் உமேஷ், சங்கரீஸ்வரி, நகராட்சி சுகாதார ஆய்வாளர் குமரவேல் மற்றும் மருத்துவக் குழுவினர்கள் கலந்து கொண்டனர்.