செய்திகள்
தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்

கொரோனாவில் இருந்து குணமடைந்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

Published On 2020-08-14 12:32 GMT   |   Update On 2020-08-14 12:32 GMT
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னை:

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு கடந்த 2 ஆம் தேதி கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அறிகுறி ஏதும் இல்லாததால் ஆளுநரை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தினர். மேலும் ராஜ்பவனில் தனிமைப்படுத்திக்கொள்ளும் ஆளுநரை மருத்துவர்கள் குழு கண்காணிக்கும் என்றும் மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவருக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் தொற்று இல்லை  என்றும் ஆளுநரின் மன உறுதி மற்றும் ஒத்துழைப்பு கொரோனாவில் இருந்து குணமாக உதவியதாக  மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News