செய்திகள்
போக்குவரத்து கழக பணிமனையில் தரை தளம்- ராஜா எம்எல்ஏ பணியை தொடங்கி வைத்தார்
அந்தியூர் கரட்டுப்பாளையத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனையில் தரை தளம் அமைக்கும் பணி தொடக்க விழா நடைபெற்றது.
அந்தியூர்:
அந்தியூர் கரட்டுப்பாளையத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனையில் தரை தளம் அமைக்கும் பணி தொடக்க விழா நடைபெற்றது.
விழாவுக்கு அந்தியூர் இ.எம்.ஆர்.ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.
இதில் பொது மேலாளர் கணபதி, கிளை மேலாளர்கள் ஜெகதீஸ், கேசவன், கிளை செயலாளர் குமரவேல், ஒன்றியக்குழு தலைவர் வளர்மதி தேவராஜ், பேரூராட்சி முன்னாள் தலைவர் டி.எஸ்.மீனாட்சி சுந்தரம், கூட்டுறவு சங்க தலைவர்கள் கிருஷ்ணன், பால்சாமி, மோகன், சண்முகானந்தம், பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர் குருராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.