செய்திகள்
மருத்துவ முகாம்

கொரோனா பரிசோதனை முகாம்

Published On 2020-08-14 09:14 GMT   |   Update On 2020-08-14 09:14 GMT
ராஜாக்கமங்கலம் அருகே கணபதிபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் முருங்கவிளை முத்தாரம்மன் கோவில் வளாகத்தில் இலவச கொரோனா பரிசோதனை முகாம் நடந்தது.
ராஜாக்கமங்கலம்:

ராஜாக்கமங்கலம் அருகே கணபதிபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் முருங்கவிளை முத்தாரம்மன் கோவில் வளாகத்தில் இலவச கொரோனா பரிசோதனை முகாம் நடந்தது. பஞ்சாயத்து தலைவர் ஜெகதீஸ்வரி சுகுமார் தலைமை தாங்கினார். ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் வினுகுமார், சுகாதார ஆய்வாளர் செல்வம், உதவியாளர் சுதா மற்றும் மருத்துவ பணியாளர்கள் பொது மக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்தனர். மேலும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

முகாமில் பஞ்சாயத்து துணை தலைவர் செல்லத்துரை, பா.ஜனதா ஒன்றிய பொது செயலாளர் சுகுமார், ராஜாக்கமங்கலம் பஞ்சாயத்து முன்னாள் துணை தலைவர் ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News