செய்திகள்
கொரோனா வைரஸ்

கோத்தகிரியில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் சப்-கலெக்டர் ஆய்வு

Published On 2020-08-14 08:09 GMT   |   Update On 2020-08-14 08:09 GMT
தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளான ஓரசோலை, கேரடா மட்டம், கன்னேரிமுக்கு, ஜெகரண்டா அவென்யூ உள்ளிட்ட பகுதிகளில் குன்னூர் சப்-கலெக்டர் ரஞ்சித் சிங் ஆய்வு மேற்கொண்டார்.
கோத்தகிரி:

கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு வார காலத்தில் சுமார் 20 பேருக்கு கொரோனா நோய் தொற்று கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர்கள் சிகிச்சைக்காக ஊட்டி மற்றும் கோவை அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் அவர்கள் குடியிருந்த பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு அங்கு முழு சுகாதார பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளான ஓரசோலை, கேரடா மட்டம், கன்னேரிமுக்கு, கல்பனா காட்டேஜ், கேர்கம்பை, லூக்ஸ்சர்ச் சாலை, ஜெகரண்டா அவென்யூ உள்ளிட்ட பகுதிகளில் குன்னூர் சப்-கலெக்டர் ரஞ்சித் சிங் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது கோத்தகிரி தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி, பேரூராட்சி செயல் அலுவலர் மணிகண்டன், சுகாதார ஆய்வாளர் ரஞ்சித் உள்பட பலர் உடனிருந்தனர்.
Tags:    

Similar News