செய்திகள்
மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு பெரம்பலூர் மின்பகிர்மான வட்ட கிளை சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
பெரம்பலூர்:
தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு பெரம்பலூர் மின்பகிர்மான வட்ட கிளை சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. பெரம்பலூர் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அகஸ்டின் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், மின்வாரிய ஊழியர்கள் தொழிற்சங்கங்களை வாரிய தலைவர் சந்திக்க தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். மின்வாரியத்தில் செயலாளர் பதவியை நிரப்பிட வேண்டும். இணை மேலாண்மை இயக்குனர் பதவியை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.