செய்திகள்
பாஜக மாநில தலைவர் முருகன்

விநாயகர் சிலைகளை நிறுவ அனுமதி தேவை- பாஜக மாநில தலைவர் முருகன் கோரிக்கை

Published On 2020-08-14 07:06 GMT   |   Update On 2020-08-14 07:06 GMT
விநாயகர் சிலைகளை நிறுவி வழிபடுவதற்கு அனுமதிக்குமாறு தமிழக அரசுக்கு பாஜக மாநில தலைவர் முருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை:

பாஜக மாநில தலைவர் முருகன் கூறியிருப்பதாவது:

விநாயகர் சதுர்த்தி விழாவை நடத்த தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும். பல்வேறு பணிகளுக்காக மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரும் சூழலில் விநாயகர் சிலைகளை நிறுவ தடை ஏன் விதிக்க வேண்டும். விநாயகர் சிலைகளை நிறுவி வழிபடுவதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும்.

விநாயகர் சிலைகளை நிறுவி தனிமனித இடைவெளியோடு மக்கள் தரிசிக்க அனுமதி தர வேண்டும். தடைகளை தகர்க்கும் கடவுளான விநாயகருக்கே தடை போடுவது வேதனை அளிக்கிறது.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


Tags:    

Similar News