செய்திகள்
கொரோனா வைரஸ்

சென்னையில் கொரோனாவுக்கு இன்று 15 பேர் உயிரிழப்பு

Published On 2020-08-14 06:34 GMT   |   Update On 2020-08-14 06:34 GMT
சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று 15 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
சென்னை:

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் நேற்று புதிதாக 5 ஆயிரத்து 835 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 20 ஆயிரத்து 355 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 61 ஆயிரத்து 459 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவில் இருந்து குணமடைவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் பலி எண்ணிக்கை உயர்ந்து கொண்டிருப்பது கவலை அளிக்கும் விதமாக உள்ளது. தினந்தோறும் பலி எண்ணிக்கை 100ஐ தொட்ட வண்ணம் உள்ளது.

இந்நிலையில் சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று 15 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 7 பேரும், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் 3 பேரும்,  ஓமந்தூரார் மருத்துவமனையில் 2 பேரும், ஸ்டான்லி மருத்துவமனையில் 2 பேரும் உயிரிழந்துள்ளனர்.
Tags:    

Similar News