செய்திகள்
தமிழக அரசு

ஆக.15ல் கிராம சபை கூட்டம் நடைபெறாது- தமிழக அரசு

Published On 2020-08-14 02:39 GMT   |   Update On 2020-08-14 02:39 GMT
இந்தாண்டு கொரோனா காரணமாக ஆகஸ்ட் 15ந்தேதி நடைபெறும் கிராம சபை கூட்டம் நடைபெறாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னை:

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:

குடியரசு தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி, உழைப்பாளர் தினத்தன்று ஆண்டுதோறும் கிராம சபை கூட்டம் நடைபெறும்.

இந்தாண்டு கொரோனா காரணமாக ஆகஸ்ட் 15ந்தேதி சுதந்திர தினத்தன்று நடைபெறும் கிராம சபை கூட்டம் நடைபெறாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News