செய்திகள்
கொரோனா வைரஸ் பரிசோதனை

மதுரையில் 151 பேருக்கு கொரோனா - 97 பேர் குணம் அடைந்தனர்

Published On 2020-08-13 23:05 GMT   |   Update On 2020-08-13 23:05 GMT
மதுரையில் நேற்று புதிதாக 151 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
மதுரை:

மதுரையில் நேற்று புதிதாக 151 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 109 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,515 ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் மதுரையில் நேற்று 97 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். 70 பேர் மதுரை அரசு ஆஸ்பத்திரியிலும், 27 பேர் தனியார் மருத்துவமனையிலும் குணமடைந்தனர். இவர்களில் 66 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். இவர்களுடன் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 11,151 ஆக அதிகரித்துள்ளது. 1,056 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள்.

இதனிடையே மதுரையில் நேற்று ஒரே நாளில் 55 வயது ஆண், 68 வயது மூதாட்டி, 68, 87, 82 வயது முதியவர்கள் என 5 பேர் கொரோனா பாதிப்பால் இறந்தனர். இவர்களில் 3 பேர் தனியார் மருத்துவமனையிலும், 2 பேர் அரசு ஆஸ்பத்திரியிலும் உயிரிழந்தனர். இவர்களுடன் சேர்த்து மதுரையில் இதுவரை கொரோனாவுக்கு 308 பேர் பலியாகி உள்ளனர்.

Tags:    

Similar News